ஏர் இந்தியாவை டாடா ஏலத்தில் வாங்கியதாக வெளியான செய்திக்கு அரசு மறுப்பு !

கடன் சுமையால் மூழ்கியுள்ள இந்திய அரசின் விமான போக்குவரத்துத்துறையான ஏர் இந்தியா நிறுவனத்தை சில ஆண்டுகளாகவே விற்கும் முயற்சியில் ஒன்றிய அரசு முயன்று வருகிறது. அதேபோல், அந்நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து இருந்தது.
கொரோனா சூழலுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கும் முயற்சியை அரசு தீவிரப்படுத்தியது. ஏல விவரங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாக அறிவித்தது. இதில், ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமம் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை அரசுக்கு சமர்ப்பித்து இருந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்க டாடா குழும தரப்பில் அளிக்கப்பட்ட தொகை ஏலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், மீண்டும் ஏர் இந்தியா டாடா நிறுவனத்தின் வசமே செல்கிறது என இந்திய அளவில் செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், இத்தகவல் ஒன்றிய அரசின் தரப்பில் மறுக்கப்பட்டு இருக்கிறது.
Twitter link
ஏர் இந்தியா விசயத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஏலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியாகும் ஊடக அறிக்கைகள் தவறானவை. அரசாங்கம் முடிவு எடுத்த பிறகு அதுகுறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழலுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கும் முயற்சியை அரசு தீவிரப்படுத்தியது. ஏல விவரங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாக அறிவித்தது. இதில், ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமம் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை அரசுக்கு சமர்ப்பித்து இருந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்க டாடா குழும தரப்பில் அளிக்கப்பட்ட தொகை ஏலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், மீண்டும் ஏர் இந்தியா டாடா நிறுவனத்தின் வசமே செல்கிறது என இந்திய அளவில் செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், இத்தகவல் ஒன்றிய அரசின் தரப்பில் மறுக்கப்பட்டு இருக்கிறது.
Media reports indicating approval of financial bids by Government of India in the AI disinvestment case are incorrect. Media will be informed of the Government decision as and when it is taken. pic.twitter.com/PVMgJdDixS
— Secretary, DIPAM (@SecyDIPAM) October 1, 2021
Twitter link
ஏர் இந்தியா விசயத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஏலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியாகும் ஊடக அறிக்கைகள் தவறானவை. அரசாங்கம் முடிவு எடுத்த பிறகு அதுகுறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.