YouTurn

5 அரசு மருத்துவமனைகளில் இனி ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

5 அரசு மருத்துவமனைகளில் இனி ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோவை, மதுரை, சேலம் , திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவமனைகளில் இனி ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கான முக்கியமான மருந்தாக ரெம்டெசிவர் உள்ளதால் அதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்துக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியன் அவர்கள் கோவை, திருச்சி உட்பட ஐந்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில் 12,500 ஆக்சிஜன் உதவி பொருத்தப்பட்ட படுக்கைகள் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவனைகளில் ரெம்டெசிவிர் மருந்து பெறுவதற்கான தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை கோவை அரசு மருத்துவமனை மாணவர்களின் “மீம்” பக்கம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தேவையான ஆவணங்கள் பின்வருமாறு;

1. நோயாளியின் RT PCR (கொரோனா ரிப்போர்ட் )
2. சிடி ஸ்கேன் ரிப்போர்ட்
3. மருத்துவரின் மருந்து பரிந்துரை ரிப்போர்ட் (அசல்)
4. நோயாளியின் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல் )
5. மருந்து வாங்க வருவோரின் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்)



ரெம்டெசிவிர் மருந்து என்பது அனைத்து கொரோனா நோயாளிகளும் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கும், மிதமான அறிகுறிகள் உள்ளவர்களும் மருத்துவர் பரிந்துரைக்காவிடின் ரெம்டெசிவிர் மருந்து அவசியமற்றது என மருத்துவர் ஒருவர் ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதும் இங்கு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

links : 

https://www.thehindu.com/news/cities/Hyderabad/remdesivir-not-for-all-patients/article34353099.ece

https://www.bbc.com/tamil/india-57035444.amp
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை