YouTurn

2021 வெள்ளை அறிக்கை: ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 கடன், தமிழக அரசின் ஒரு நாள் வட்டி ரூ.87 கோடி !

2021 வெள்ளை அறிக்கை: ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 கடன், தமிழக அரசின் ஒரு நாள் வட்டி ரூ.87 கோடி !
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை தொடர்பாக வெளிப்படையான விளக்கத்தை தரும் வெள்ளை அறிக்கையை இன்று செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.

மாநில கடன் தொகை :

மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையால் தொடர்ந்து உயர்ந்து வரும் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க பெறப்படும் கடன்களால் மாநிலத்தின் ஒட்டு மொத்த கடன் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து செல்கிறது. 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, 31.3.22 வரை ஒட்டுமொத்த நிலுவைக் கடன் தொகை 5,70,189 கோடியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.



2011-2012-ம் ஆண்டில் 1,15,412.38 கோடியாக இருந்த மொத்த நிலுவைக் கடன் அளவு 2021-22-ம் ஆண்டில் 5,70,189.29 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கடன் அளவு 4.5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து உள்ளது.

வருவாய் பற்றாக்குறை :



2011-12 முதல் 2015-16 வரை அதிமுக ஆட்சியில் ஐந்தாண்டு கால வருவாய் பற்றாக்குறை 17,058 கோடியாக இருந்தது. 2016-17 முதல் 2020-21 வரை ஆட்சியில் ஐந்தாண்டு கால வருவாய் பற்றாக்குறை 1,55,246 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

ஒவ்வொரு குடும்பத்தின் மீதுள்ள கடன் : 

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் பொதுக்கடன் இருப்பதாக வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மின்துறை மற்றும் போக்குவரத்துத்துறை கடன் :

போக்குவரத்துத்துறையும், மின்துறையுமே தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்குவதாக பெரிதும் கூறப்படுவதுண்டு. இவ்விரு துறைகளையும் சேர்த்தே 2 லட்சம் கோடிக்கு மேல் கடன் தொகை இருக்கிறது.



வெள்ளை அறிக்கையில், 2020-21 வரையில் மின்துறையில் நிலுவையில் உள்ள உத்தரவாதங்கள் 82, 916 கோடியாகவும் , மின்துறையில் நிலுவையில் உள்ள கடன்கள் 1,59,668 கோடியாகவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்து துறையில் நிலுவையில் உள்ள உத்தரவாதங்கள் 4 ,642 கோடியாகவும், நிலுவையில் உள்ள கடன்கள் 11,840 கோடியாகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வாங்கி இருக்கும் கடன்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடியை வட்டியாக மட்டுமே கட்டி வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருக்கிறார்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை