YouTurn

2020 நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் குளறுபடிகள்| எழுதியது 3 ஆயிரம், தேர்ச்சி 88 ஆயிரம் என வெளியீடு !

2020 நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் குளறுபடிகள்| எழுதியது 3 ஆயிரம், தேர்ச்சி 88 ஆயிரம் என வெளியீடு !
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற்று முடிந்த 2020 நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷான்க் தன் ட்விட்டர் பக்கத்தில் தேர்வு முடிவுகளை பகிர்ந்து உள்ளார். ஆனால், நீட் தேர்வு முடிவில் மாநில அளவில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களில் குளறுபடிகள் பல உள்ளன.



Twitter link | Archive Link 

2020-ம் ஆண்டில் திரிபுராவில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 3,536 பேர், ஆனால் வெளியான அறிவிப்பில் 88,889 பேர் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 50,392 பேர் எழுதி 1,738 பேர் தேர்ச்சி ஆன நிலையில் தேர்ச்சி சதவீதம் 49.15% என்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,56,992 பேர் தேர்வு எழுதி 7,323 தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தேர்ச்சி சதவீதம் 60.79% எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதி 37,301 பேர் தேர்ச்சி என குளறுபடிகளோடு முடிவு வெளியாகி இருக்கிறது.



இதுமட்டுமின்றி, 2020 ஆகஸ்ட் மாதம் தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட அறிக்கையில் இருக்கும் மாநில அளவில் 2019, 2020 நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும், தற்போது வெளியாகி உள்ள முடிவில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் உள்ளது. 2020 நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



Link :

National Testing Agency 2020
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை